வேலூர்: குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார். வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், புதிய தொழில் தொடங்குவதற்கான கடன்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-19ம் ஆண்டுகளில் இந்த வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய கடன்களில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது. அதன்பேரில் கூட்டுறவு சங்க தணிக்கை அதிகாரிகள் குடியாத்தம் வங்கி கிளையில் ஆய்வு செய்தனர்.