ஆம்பூர்: மாதனூர் பாலாற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைக்கப்பட்டதையடுத்து நேற்று போக்குவரத்து மீண்டும் துவங்கியது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் செல்லும் சாலையில் பலாற்றில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரை பாலம் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. உடன் அங்கு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த தற்காலிக தரைப்பாலம் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பெய்த மழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அடித்து செல்லபட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பல்வேறு கிராமத்தினர் தவித்து வந்தனர்.