கீவ்: துறைமுக நகரை தொடர்ந்து தொழில்துறை நகரத்தை கைப்பற்றும் முனைப்பில் கிழக்கு உக்ரைனில் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் துறைமுக நகரமும், பொருளாதார நகரமுமாக இருந்த மரியுபோலை முழுமையாக கைப்பற்றி உள்ளது. தற்போது, கிழக்கு உக்ரைன் மீது கவனம் செலுத்தி உள்ள ரஷ்யா, அங்குள்ள ஒவ்வொரு நகரத்தையும் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. டான்பாஸ் பிராந்தியம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனின் தலைநகரான ஸ்லோவியன்ஸ்க் மற்றும் கிராமடோர்ஸ்க் செல்லும் சாலையில் உள்ள முக்கிய நகரமான லைமனை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ளது.