இஸ்ரேலின் மும்முனை தாக்குதலில் காசாவின் வடக்கு, தெற்கு பகுதிகளில் உள்ள வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களும் சிதிலமடைந்து விட்டன. லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் சொந்த இடங்களை விட்டு வௌியேறி விட்டனர். இந்நிலையில் ஐநா வௌியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலின் தரைவழி, வான்வழி தாக்குதல்களில் கடந்த ஏழு மாதங்களில் காசா நகரில் ஏராளமான குடியிருப்புகள் சிதைந்து விட்டன. இந்த வீடுகள் அனைத்தையும் கட்டி முடித்து, மீண்டும் மக்கள் குடியேற 2040ம் ஆண்டு வரை ஆகலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முடிவின்றி நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல் காசாவில் வீடுகளை சீரமைக்க 16 ஆண்டுகள் ஆகும்: ஐ.நா. அறிக்கை appeared first on Dinakaran.