நத்தம்: நத்தம் அருகே சாத்தாம்பாடியில் உள்ள வீரமுடையான், வேட்டைக்காரன் அய்யனார் மற்றும் கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி மே20ந் தேதி சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 27ந் தேதி வீரமுடையான், வேட்டைக்காரன் சுவாமிகள் மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தது.