ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.45 மணிக்கு பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.

மூன்று நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் ஆளுநர், நாளை மாலை 4.20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். ஆளுநரின் இந்த திடீர் டெல்லி பயணம் அவரது சொந்த பயணம் என்றும், வேறு சிறப்பான காரணங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Related Stories: