10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் மெளனிகா (15). இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

மாணவி மௌனிகா தேர்வை சரிவர எழுதவில்லை என, சக தோழிகள் மற்றும் பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறியுள்ளனர். இருப்பினும் மனமுடைந்து காணப்பட்ட அவர், கடந்த 13ம் தேதி, எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கினார். அவரை பெற்றோர் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: