குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி

*தக்கலை அருகே பரபரப்பு

குமாரபுரம் : தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பெனட்(52) கூலி தொழிலாளியான இவருக்கு ஜெயா என்ற மனைவியும் 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் பெனட் தனது தாயார்,மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். குடிபோதைக்கு அடிமையான பெனட் மனைவி ஜெயாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று மதியம் குடிபோதையில் வந்த பெனட் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதோடு மருமகளையும் தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஜெயா அடுப்பில் பானையில் இருந்த வெந்நீரை பெனட் மீது ஊற்றியுள்ளார். இதில் தடுக்க வந்த தாயார் மற்றும் பெனட் உடல் முழுவதும் கொப்பளங்களால் தீக்காயம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த பெனட் அப்படியே விழுந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல யாரும் முன்வராத நிலையில் வீட்டிலேயே கிடந்துள்ளார்.

தற்போது அவர் தீக்காயங்களுடன் கட்டிலில் கிடப்பதும், அதை பார்த்த உறவுக்கார பெண் ஒருவர் ஜெயிலுக்கு உனக்க மருமகளும் போவா, உனக்க மகனும் போவான் ,உனக்க பெண்டாட்டியும் போவா பாத்துக்கோ என பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி appeared first on Dinakaran.

Related Stories: