திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் ஊராட்சி நாகலுடையான் இருப்பு பகுதியில் கடந்த இருபது வருடங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் முறையான நீர்தேக்க தொட்டி இல்லாததாலும், இந்த பகுதிக்கு குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. குடிநீர் பிரச்னையை சரி செய்ய புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி சுமார் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.