திருமலை: ஆந்திர மாநில அரசுக்கு அம்மாநில போக்குவரத்து துறை நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம் மற்றும் பாதுகாப்புக்கு வழங்கப்படும் வாகனங்களுக்கு ₹17 கோடியே 5 லட்சம் மாநில அரசு செலுத்த வேண்டி உள்ளது. இந்த தொகை கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனை உடனே செலுத்தாவிட்டால் முதல்வர், முக்கிய பிரமுகர்களின் சுற்றுப் பயணத்திற்கு வாகனங்களை வழங்க முடியாது. முதல்வரின் மாவட்ட சுற்றுப் பயணங்கள் விரைவில் தொடங்க உள்ளது.