திருவள்ளூர்: தடம் மாறும் இளைய தலைமுறையை நல்வழிப்படுத்த திருவள்ளூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் இறைச்சி கடையில் சிறு நூலகம் நடத்தி வருவது பாராட்டை பெற்று வருகிறது. திருவள்ளூர் அருகே ஈக்காட்டை சேர்ந்த கார்த்திக், சென்னை மாநில கல்லூரியில் பட்டம் பெற்றவர். வேலை இழந்து வறுமையில் உழன்ற போது நண்பர்கள் இவருக்கு இறைச்சி கடை வைத்து கொடுத்துள்ளனர். நண்பர்கள் உதவியால் வளர்ந்த அவர், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் இறைச்சி கடையில் சிறு நூலகம் வைத்துள்ளார்.