புதுடெல்லி: அதிமுக உட்கட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில், ‘அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை ஏற்க முடியாது. அதேப்போன்று கடந்த 05.12.2016ம் ஆண்டு முதல் இன்று வரையில் மாற்றுக் கட்சிக்கு செல்லாத நபர்களின் பட்டியலை தயார் செய்தும், குறிப்பாக 5வருடம் கட்சியில் தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்த ஒருவரை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க ஆணையம் உத்தரவிட வேண்டும்.