சிவகாசி: சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மே 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.11 நாட்கள் நடக்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மே 8ம் தேதி நடந்த 5ம் நாள் திருவிழாவில் அரிசி கொட்டகை மண்டபத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மே 9ம் தேதி 6ம் திருவிழாவில் நவரத்தின சிம்மாசனத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அக்னிசட்டி, கயர் குத்து, முடிகாணிக்கை, முத்து காணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை காணிக்கை என நேர்த்திகடன் செலுத்தி பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.