வருசநாடு: தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை, சோலைதேவன்பட்டி, உப்புத்துறை, தங்கம்மாள்புரம் வருசநாடு, தும்மக்குண்டு, குமணன்தொழு உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாராகும் செங்கல், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் செங்கல் சூளைக்கு தேவையான விறகு, மணல், கரம்பை மண் ஆகியவற்றின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.