கொழும்பு: இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டதிட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது இலங்கை. இலங்கையில் இன்றும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வெடித்த மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.