விருத்தாச்சலம் அருகே வீட்டில் கருக்கலைப்பு செய்ய முயன்ற பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் வீட்டில் கருக்கலைப்பு செய்ய முயன்ற பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு முருகன் மெடிக்கல் என்ற கடையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த  பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்ததால், அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமையில் ராமநத்தம் பகுதியில் மருந்தகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது மங்களூர் கிராமத்தில் இருந்து ஒரு பெண்ணுக்கு வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து மருத்துவக்குழு அங்கு சென்றபோது வீட்டின் உரிமையாளர் குமார் மற்றும் அவருடைய மனைவி சித்திரா இரண்டுபேரும் சேர்ந்து உளுந்தூர் பேட்டை புரிந்தல் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்துள்ளனர்.

மருத்துவக்குழுவை பார்த்த குமார் மற்றும் சித்திரா இரண்டுபேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். வீட்டில் ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Related Stories: