டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் முக்கிய நகரங்களான டேராடூன், ரூர்க்கி, ரிஷிகேஷ், ஹரித்வார், நஜிபாபாத், லக்சர் ஆகிய இடங்களில் உள்ள 6 ரயில் நிலையங்கள் தகர்க்கப்படும் என, அம்மாநில போலீசாருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதையடுத்து மேற்கண்ட ரயில் நிலையங்களில் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். இதுகுறித்து உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார் கூறுகையில், ‘மே 7ம் தேதி ரூர்க்கி ரயில் நிலைய கண்காணிப்பாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.