ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் குட்டியுடன் ஒற்றை யானை சுற்றிவருகிறது. இந்த யானை ராமாபுரம், அம்பலட்டி, கோபசந்திரம், பீர்ஜேபள்ளி, சானமாவு உள்ளிட்ட கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் கிராம பகுதிக்கு வரும் யானை, பொழுது புலர்ந்ததும் வனப்பகுதிக்கு செல்லாமல் நீண்ட நேரமாக ஊருக்குள்ளேயே சுற்றி வருவதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.