கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜ இளைஞரணி தலைவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநிலம், காசிபூர் பாஜ இளைஞரணி தலைவர் அர்ஜூன் சௌராசியா. 2 நாள் பயணமாக மாநிலத்துக்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமான நிலையத்தில் இருந்து பைக் பேரணியாக சென்று வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அர்ஜூன் ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிலையில் கோஷ் பாகன் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அர்ஜூன் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.