நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பை அருகே பத்தமடையில் ஆட்டோ மீது மரம் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை அகற்றும் போது, ஆட்டோ மீது மரம் சரிந்து விழுந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் நெடுஞ்சாலையில் பத்தமடை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு இன்று மரத்தை அப்புறப்படுத்துவதற்காக பணிகள் நடைபெற்று வந்தன. விரிவாக்க பணியின் போது ஆலமரம் தோண்டப்பட்ட போது மரம் ஆட்டோவின் மீது சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில ஆட்டோ டிரைவர் காதர் மற்றும் ஆட்டோவில் வந்த பெண் ரஹமத் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.