பெய்ஜிங் : சீனாவின் ஷாங்காயை அடுத்து தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் பெருமளவு ரயில் மற்றும் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சீனாவில் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக சீன தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. பெய்ஜிங்கில் ஒரே நாளில் புதிதாக 53 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.