சான்பிரான்சிஸ்கோ: சாதாரண பயனர்கள் தவிர வணிகம் மற்றும் அரசு நிறுவனங்கள் டுவிட்டரில் பதிவுகளை போட்டால், கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதன் தலைவர் எலோன் மஸ்க் கூறி உள்ளார். உலகின் மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன் சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இவர் தற்போது டுவிட்டர் நிறுவனத்தில் பல பெரிய மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளார். டுவிட்டர் நிறுவனத்தில் இருந்த இந்தியரான தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், பாலிசி தலைவர் விஜயா காடே ஆகியோர் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.