பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே கரடி ஊருக்குள் புகுந்து வாளியில் இருந்த தண்ணீரை குடித்தது. இதைப்பார்த்து பீதியடைந்த மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கேரள - தமிழக எல்லையான மேற்குதொடர்ச்சிமலை பரம்பிக்குளம் காட்டுப்பகுதியில் அதிகளவில் கரடிகள் உள்ளன. இவற்றில் ஒன்று வழிதவறி கொல்லங்கோடு பகுதிக்கு வந்தது. பின்னர், அது சீதார்குண்டு அடுத்த தடிக்காடு மலையரவாரத்திற்குள் புகுந்தது.