சின்னாளபட்டி: ஆடலூர், கன்னிவாடி, பன்றிமலை, தோனிமலை, டி.பண்ணைப்பட்டி, கோம்பைகரடு உள்ளிட்ட மேற்கு தொ டர்ச்சி மலைக்கிராமங்களில் அடிக்கடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மக்களை அச்சுறுத்துவது வழக்கம். குறிப்பாக, கன்னிவாடி அருகே கோம்பை, ஆல்டா நகர், நாயோடை நீர்த்தேக்கம் பகுதியில் அடிக்கடி யானை வந்து விளைநிலங்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகளும் கவலை அடைந்து வந்தனர். கடந்த 20 தினங்களுக்கு முன்பு வனத்துறையை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் ஒருவரை யானை மிதித்து கொன்றதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதிக்கு செல்ல அச்சப்படுவதோடு குடியிருப்பை காலி செய்து கன்னிவாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வந்து தங்கி வருகின்றனர்.