இந்த கோயில் இருக்கும் பகுதிக்கும், கோயிலுக்கும் பெண்கள் வரக்கூடாது. இது, ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட விநோத திருவிழாவாகும். இவ்விழாவில் பிரசாதமாக அனைவருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது. இதில் சேத்தூர், அரவங்குறிச்சி, ந.புதுக்கோட்டை, சேத்தூர், பட்டிக்குளம், நல்லூர், குரும்பபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கறி விருந்து சாப்பிட்டனர். பக்தர்கள் கூறுகையில், ‘‘இந்த விழாவில் பிரசாதமாக வழங்கப்படும் கறி விருந்து சாப்பாட்டை ஆண்கள் மற்றும் 2 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் மட்டுமே சாப்பிட வேண்டும். பெண்கள் இவற்றை பயன்படுத்தக் கூடாது’’ என்றனர்.
The post ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில் 200 ஆடுகளை பலியிட்டு 15 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் கறி விருந்து appeared first on Dinakaran.