திருச்செந்தூர்: இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன்தியாகராஜா, நேற்று முன்தினம் திருச்செந்தூர் வந்தார். தனியார் விடுதியில் தங்கிய அவர், நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் ஜீவன்தியாகராஜா, அளித்த பேட்டியில் ‘‘தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்ததற்காக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.