புனே: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ரபாடாவின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது.எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசியது. டி காக், கேப்டன் கே.எல்.ராகுல் இருவரும் பஞ்சாப் இன்னிங்சை தொடங்கினர். ராகுல் 11 பந்தில் 6 ரன் மட்டுமே எடுத்து ரபாடா வேகத்தில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் வசம் பிடிபட்டார். அடுத்து டி காக் - தீபக் ஹூடா ஜோடி பொறுப்புடன் விளையாட, லக்னோ ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.இருவரும் 2வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தனர். டி காக் 46 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஹூடா 34 ரன் (28 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, லக்னோ திடீர் சரிவை சந்தித்தது. க்ருணால் பாண்டியா 7, ஆயுஷ் பதோனி 4, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.