மும்பை: மும்பை தெற்கு மத்திய தொகுதியின் சிவசேனா எம்பி ராகுல் ஷெவாலே மீது, இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தெற்கு மத்திய தொகுதியின் சிவசேனா கட்சி எம்பி ராகுல் ஷெவாலே மீது, 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை சகினாகா காவல் நிலையத்தில் அளித்துள்ளார். இப்புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.