வாஷிங்டன்: சீனாவில் நேற்று முன்தினம் புதுவிதமான பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில், அமெரிக்காவில் நேற்று கோழிப்பண்ணையாளர் ஒருவருக்கு avian influenza எனப்படும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2002ம் ஆண்டு H3N8 பறவை காய்ச்சல் தொற்று வட அமெரிக்காவில் வாழும் நீர் பறவைகளில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.இந்த கிருமி பறவைகள், குதிரைகள், நாய்கள் மற்றும் சீல்களை பாதிப்பதாக அறியப்பட்ட போதும் மனிதர்களுக்கு பரவியதாக தகவல் இல்லை. இந்த நிலையில் சீனாவின் ஹினான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு சமீபத்தில் H3N8 பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.