ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன் காலிறுதியில் சாத்விக், சிராக்: முன்னேறினார் சிந்து

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் 39வது ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் யுயே யான் ஜஸ்லின் உடன் பி.வி.சிந்து மோதினார். அதில் சிந்து 42நிமிடங்களில் 21-16, 21-16 என நேர் செட்களில்  ஜஸ்லினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நெவால் 21-12, 7-21, 13-21 என்ற செட்களில் சீன வீராங்கனை வாங் ஜீ யிடமும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீ காந்த்  16-21, 21-17, 16-21 என்ற செட்களில் சீன வீரர் வெங் ஹோங் யங்கிடமும் போராடியும் தோற்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரரகள் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணை, ஜப்பானின் அகிரா கோகா, டாயச்சி சய்டோ இணையுடன் விளையாடியது. அதில் இந்திய இணை 43 நிமிடங்களில்  21-17, 21-15 என நேர் செட்களில் ஜப்பான் இணையை வென்று காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.

Related Stories: