துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே நேற்று இரவு ஏற்பட்ட காட்டு தீயால் பெரும் பரபரப்பு நிலவியது.துவரங்குறிச்சி அடுத்த அக்கியம்பட்டி அருகே உள்ள கிளாமரத்த குட்டு மலை பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு நேற்று இரவு திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மலைப்பகுதி என்பதால் தண்ணீர் நிரப்பிய வாகனம் மேலே முடியவில்லை.