இந்நிலையில் நேற்று காலை சிறுமியின் தாய் வனிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வனிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக மரக்காணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மரக்காணம் அருகே பள்ளி மாணவி காதலனுடன் சென்றதால் தாய் தூக்குபோட்டு தற்கொலை appeared first on Dinakaran.