அண்ணாநகர்: நொளம்பூர் பகுதியில் லாரியில் பேட்டரி திருடி தப்ப முயன்ற திருடர்களை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். சென்னை நொளம்பூர் பஞ்சாலை தெருவை சேர்ந்தவர் வடிவேல்(41). இவர் சொந்தமாக லாரிகளை வைத்து ஜல்லி, மணல் மற்றும் சிமென்ட் ஏற்றுமதி செய்து வருகின்றார். நேற்று நொளம்பூர் எஸ்பி.கார்டன் பகுதியில் தனது டாரஸ் மற்றும்லாரியை நிறுத்தியிருந்தார். அங்குள்ள கடைக்கு சென்றுவிட்டு வடிவேல் திரும்பியபோது லாரியில் இருந்து பேட்டரியை 4 பேர் திருடி 2 பைக்குகளில் தப்ப முயன்றனர். இதை பார்த்ததும் வடிவேல் கூச்சலிட்டதால் பொதுமக்கள் வந்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து பைக்கில் தப்ப முயன்ற 3 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பிவிட்டார். பின்னர் அவர்களை சரமாரியாக அடித்து உதைத்து நொளம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.