இதை அவருடன் வந்த மற்றொரு வாலிபர் செல்போனில் வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விசாரணையில் பூனாம்பாளையம் பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் நிகேஷ் (19) என்றும் பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் சும்மா இருந்ததும் தெரிய வந்தது. 8 பிரிவுகளில் வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் பாலத்தில் சென்டர் மீடியனில் மொபட் ஓட்டிச்சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
The post படுத்துக்கிட்டே பைக் ஓட்டி சாகசம் செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.