லண்டன்: சுதந்திரமான பேச்சு குறித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவுக்கு எதிர்வினையாக, டுவிட்டரில் இருந்து வெளியேறுவதாக நடிகை ஜமீலா ஜமீல் அறிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், சர்வதேச பிரபலங்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹாலிவுட் நடிகையும், தொகுப்பாளருமான ஜமீலா ஜமீல் வெளியிட்ட பதிவில், ‘ஆஹா! அவருக்கு டுவிட்டர் கிடைத்துவிட்டது. இது என்னுடைய கடைசி டுவிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் (எலான் மஸ்க்) கூறியுள்ள சுதந்திரமான பேச்சுரிமை என்பது நரகத்தின் தளத்திற்கு கொண்டு சேர்க்கும். தீங்கான நடத்தையை ஊக்குவிக்கும். வெறுப்பு, மதவெறி, பெண் வெறுப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் என்று நான் அஞ்சுகிறேன்.