இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா போட்டபோவா சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் சக வீராங்கனை வெரோனிகா குதெர்மெதோவாவுடன் (25 வயது, 29வது ரேங்க்) மோதிய அனஸ்டேசியா (21வயது, 122வது ரேங்க்) 6-3, 6-1 என நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 23 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அனஸ்டேசியா முதல் முறையாக டபுள்யு.டி.ஏ தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியால் அவர் 44 இடங்கள் முன்னேறி 78வது இடத்தை பிடித்துள்ளார். வெரோனிகா 4 இடங்கள் முன்னேறி 25வது இடத்தை எட்டியுள்ளார்.