அம்பத்தூர்: சென்னை வில்லிவாக்கம் பாபா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குமார் (30). இவரது மனைவி விஜயா (28) (பெயர்கள் மாற்றம்). இவர்களுடன், அதே பகுதியை சேர்ந்த தனஞ்ஜெயன் (29) மற்றும் அவரது குடும்பத்தினர் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில் தனஞ்ஜெயனுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டுள்ளது. உடனே குமார்-விஜயா தம்பதியிடம் கேட்டுள்ளார். உடனே அவர்களும் சம்மதித்து, 2 ஆண்டுகளுக்கு முன் ₹1 லட்சம் மற்றும் விஜயா வின் அரை பவுன் கம்மலை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்தாண்டு, ஜுலையில் கடனை கேட்க தனஞ்ஜெயனின் வீட்டுக்கு விஜயா சென்றார். அந்த நேரத்தில், விஜயாவை தனஞ்ஜெயன் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.