இந்தியா பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங். கட்சியினர் போராட்டம்..!! Jun 11, 2021 காங்கிரஸ் ஹூப்ளி தின மலர் ஹூப்ளி: பெட்ரோல், டீசல் விலை பல்வேறு பகுதிகளில் 100 ரூபாயை எட்டியுள்ள நிலையில் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியினர், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், ஒன்றிய பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் கர்நாடகாவின் கல்புர்கி உள்ளிட்ட பகுதிகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கார் ஒன்றை குதிரை வண்டியில் ஏற்றி காங்கிரஸ் கட்சியினர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். காருக்கு மாலையிட்டு இறுதி மரியாதை செய்த அவர்கள், காரை குதிரை வண்டியில் ஊர்வலமாக எடுத்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். … The post பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங். கட்சியினர் போராட்டம்..!! appeared first on Dinakaran.
ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்
மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ‘பிஓகே’ இந்தியாவில் சேரும்: மகாராஷ்டிராவில் உ.பி. முதல்வர் பேச்சு
ரூ.21 லட்சம் சொத்துக்களை பிரித்துக்கொண்டு தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாமல் 2 நாளாக வைத்திருந்த மகன், மகள்கள்: ஆந்திராவில் அவலம்
கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்