ஆலங்குடி : ஆலங்குடியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காந்தி சாலை பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மனைவி சரஸ்வதி(50). இவர் தனது வீட்டின் பின்பகுதியில் உள்ள கிணற்றில் நீர் இறைக்கும் போது தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.