ஆலங்குடியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

ஆலங்குடி : ஆலங்குடியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காந்தி சாலை பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மனைவி சரஸ்வதி(50). இவர் தனது வீட்டின் பின்பகுதியில் உள்ள கிணற்றில் நீர் இறைக்கும் போது தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிற்றின் உதவியுடன் சரஸ்வதியை பத்திரமாக மீட்டனர்.

Related Stories: