காரியாபட்டி : நரிக்குடியில் நிழற்குடை மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நரிக்குடியை சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராம மக்கள் பல்வேறு அடிப்படை காரணங்களுக்காகவும், வேலைக்காகவும் நரிக்குடிக்கு வந்து செல்கின்றனர். மேலும், நரிக்குடி பஸ் நிலையத்தில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், ராமேஸ்வரம், சிவகங்கை, வீரசோழன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.எனவே இந்த பஸ் நிலையம் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும். ஆனால் பஸ் நிலையத்தில் மக்களுக்கும், பேருந்து நின்று செல்ல போதிய அடிப்படை வசதிகள் இல்லை.