சென்னை: சட்ட பேரவையில் கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:
பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 15 ஊராட்சி பகுதிகள் உள்ளன. குறிப்பாக பல்லாவரம் தொகுதியில் உள்ள பொழிச்சலூர் மற்றும் திரிசூலம் ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று விட்டது. ஆனால், சாலை பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. ஆகவே, சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க ஊராட்சி பகுதிகளுக்கு நிதி ஆதாரம் வழங்க வேண்டும், என்றார்.