பழநி அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் பலி

பழநி: பழநி அருகே பூசாரிகவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவர் தனது தோட்டத்தில் ஆட்டு பட்டி அமைத்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு இந்த பட்டிக்குள் அப்பகுதியில் திரிந்த வெறிநாய்கள் புகுந்து, அங்கிருந்த ஆடுகளை கடித்து குதற ஆரம்பித்தன.

ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வெறிநாய்களை விரட்டி அடித்தனர். பின்னர் பட்டிக்கு சென்று பார்த்ததில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து உரிமையாளர்கள், உயிரிழந்த ஆடுகளை தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தினர். ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டுமன விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: