போர்ஷே கிராண்ட் பிரீ பிளிஸ்கோவா முன்னேற்றம்

ஜெர்மனியின் ஸ்டுட்காட் நகரில் நடக்கும் போர்ஷே கிராண்ட் பிரீ மகளிர் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார். சக வீராங்கனை பெத்ரா குவித்தோவாவுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-4, 4-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 2 மணி, 23 நிமிடம் போராடி வென்றார். அவர் அடுத்த சுற்றில் ரஷ்ய வீராங்கனை லியுட்மிலா சாம்சனோவாவின் சவாலை சந்திக்கிறார்.

Related Stories: