ஐதராபாத்: தெலுங்கு பட தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த மூத்த டோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங் (76), உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், சிவகார்த்திகேயன் உள்பட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.