டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது சக வீரர்களை கலக்கமடைய செய்துள்ளது. நடைபெற்று வரும் 15வது ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்நிலையில் அணியில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேப்பிட் ஆண்டிஜன் பரிசோதனையில் அந்த வீரருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.