நாகர்கோவில்: தொலை தொடர்பு சேவை மக்களுக்கு அத்தியாவசிய தேவையான ஒன்றாக மாறிவிட்டது இதனால் தொலை தொடர்பு நிறுவனங்கள் நாளுக்கு நாள் தொலை தொடர்பின் வேகத்தை அதிகரித்து வருகின்றன இதனால் பூமிக்குள் போடப்பட்டு இருந்த கேபிள்களின் தரத்தை உயர்த்தி புதிய கேபிள்கள் போடும் பணிகள் நகர பகுதியில் நடந்து வருகிறது கடந்த காலங்களில் தொலை தொடர்பு நிறுவனங்கள், தங்களது நெட் மற்றும் போன் இணைப்பு கேபிள்களை சாலையோரம் பூமிக்குள் பதித்தன இதில் தொழிலாளர்கள் சாலைஓரம் பள்ளம் தோண்டி கேபிள்களை பதித்து வந்தனர் தற்போது இயந்திரம் கொண்டு ஆழ்துளை கிணறு அமைப்பது போன்று சாலையின் ஓரத்தில் ஒரு இடத்தில் பள்ளம்தோண்டி சாலையின் கீழ் பகுதியில் கேபிள்கள் பதிக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்று மாநகர பகுதியில் இந்த கேபிள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன இப்படி இயந்திரம் கொண்டு கேபிள்கள் பதிக்கும்போது தரையின்கீழ் போடப்பட்டு இருக்கும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து வருகிறது ஆனால் எந்த பகுதியில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது என காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.