1 முதல் 5ம் வகுப்பு வரை தமிழில் கண்டிப்பாக படிக்க வேண்டும்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: 1 தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று அளித்த பேட்டி: புதிய கல்வி கொள்கையின்படி 3வது மொழியாக பிடித்த எந்த மொழியை வேண்டுமென்றாலும் படிக்கலாம். தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் கண்டிப்பாக தமிழில்தான் படிக்க வேண்டும். இதுதான் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ நிலை. தமிழ் இணைப்பு மொழியாக வேண்டும் என்றால் நிறைய இடத்தில் தமிழை படிக்க வைக்க வேண்டும். இந்தி திணிப்பு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி சொன்ன பிறகு தமிழகத்தில் எதற்காக அரசியல்வாதிகள் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்.

Related Stories: