சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசுகையில், ‘பல்லாவரம் 6 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதி. இங்கு 60க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இங்குள்ள மக்கள், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்றால், ஒருபுறத்தில் தாம்பரத்துக்கு 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். மற்றொருபுறம் ஆலந்தூருக்கு 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். ஏற்கனவே, கடந்த சட்டசபை கூட்டத்தில் நான் பேசுகின்ற போது பலமுறை இதை குறிப்பிட்டு பேசி இருக்கிறேன். எனவே, பல்லாவரத்தில் மண்டல உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும்,’ என்றார்.