கொல்கத்தா: கொல்கத்தாவில் பயணிகளோடு பயணியாக குதிரையை அழைத்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் சீல்டா - டயமண்ட் துறைமுகம் இடையிலான லோக்கல் ரயிலில், பயணிகளோடு பயணிகளாக குதிரை ஒன்று பயணம் செய்த புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது. ரயில்வே சட்டத்தின்படி, இதுபோன்று விலங்கினங்களை ரயிலில் அழைத்து செல்வது குற்றம் என்பதால், லோக்கல் ரயிலில் குதிரையை அழைத்து சென்ற நபர் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கபூர் அலி முல்லா (40) என்பவர் ரயிலில் குதிரையை அழைத்து சென்றது தெரியவந்தது.