லிமா: பெரு நாட்டு அதிபருக்கு ஆதரவாக அந்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கத்தினர், மாபெரும் பேரணி நடத்தினர். அதிபரை செயல்படாமல் தடுக்கும் காங்கிரசை முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பெரு நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் அதிகரித்து வரும் சுங்கக்கட்டண உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. எரிபொருள் மற்றும் சுங்கக்கட்டண விலை உயர்வை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விலைவாசி உயர்வை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவி பெரும்சேதத்தை ஏற்படுத்தியதாக பெரு நாட்டு பிரதமர் அனிபல் டாரஸ் குற்றம் சாட்டியுள்ளார்.